×

புதுவையில் 3 ரவுடிகள் மீது குண்டாஸ் பாய்ந்தது

புதுச்சேரி, அக். 27:   புதுவையில் கிராமப்புறத்தை சேர்ந்த 3 ரவுடிகளை குண்டாசில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். புதுவையில் ரவுடிகளை ஒடுக்குவதில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். காமராஜர் நகர் இடைத்தேர்தலையொட்டி 25க்கும் மேற்பட்ட ரவுடிகளை ஊரில் நுழைய தடைவிதிக்க பரிந்துரை செய்யப்பட்டது. 10 ரவுடிகள் ஊரில் நுழையவும் சப்-கலெக்டர்கள் உத்தரவிட்டிருந்தனர். இதனிடையே புதுச்சேரியைச் சேர்ந்த 3 ரவுடிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருபுவனை அருள்பிரகாசம் (28), சுகு என்ற சுகுமாறன் (30) ஆகியோரை குண்டாசில் கைது செய்ய கலெக்டர் அருண் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து போலீசார் இந்நடவடிக்கையை எடுத்துள்ளனர். இவர்கள் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புதுச்சேரி காமராஜர் சாலையில் ஒரு தியேட்டரில் புதுப்படம் வெளியாகி உள்ள நிலையில் பிளாக்கில் டிக்கெட் விற்ற ரெட்டியார்பாளையம் சுதாகரை (30) போலீசார் கைது செய்தனர்.

திருக்கனூர்:  திருக்கனூரை அடுத்த சோரப்பட்டை சேர்ந்தவர் தமிழ் (எ) தமிழ்வாணன் (35). இவர் மீது கொலை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த ஏப்ரல் 24ம் தேதி அர்ஜூனன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் தமிழ்வாணன் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தார். இந்நிலையில் அவர், ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர் தினமும் மாகே காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து திருக்கனூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் எஸ்பி ரங்கநாதன் மூலம் தமிழ்வாணனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் கைது செய்ய அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தனர். அதன்பேரில் தமிழ்வாணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். தற்போது சிறையில் உள்ள தமிழ்வாணனுக்கு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

Tags : Gundas ,rounds ,New Delhi ,
× RELATED தேர்தலையொட்டி கெத்து காட்டும்...