×

குளத்தில் தவறி விழுந்து மூதாட்டி பரிதாப சாவு

விருத்தாசலம், அக். 27: விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள ரூபநாராயணநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அரசன் மனைவி மங்காயி (85). இவர் சம்பவத்தன்று காலை அப்பகுதியில் உள்ள குளத்துக்கு குளிக்க சென்றவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மங்காயி குளத்தில் இறந்து கிடப்பதாக அப்பகுதிமக்கள் பார்த்துவிட்டு அவரது மகன் சிங்காரவேலுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிங்காரவேல் மங்கலம்பேட்டை காவல்நிலையத்துக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு விரைந்து சென்ற மங்கலம்பேட்டை போலீசார் இறந்து கிடந்த மங்காயியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குளத்தில் தவறி விழுந்து மூதாட்டி இறந்திருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து சிங்காரவேல் கொடுத்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Muthatti ,death ,pool ,
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...