உடுமலை,அக்.27: உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் தீபாவளி பண்டிகையையொட்டி துங்காவி கிராமத்தில் நேற்று 10க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள்,இனிப்புகள் வழங்கியதோடு மரக்கன்றுகள் வழங்கி தீபாவளி நல்வாழ்த்து கூறினார். இதேபோல துங்காவி கிராமத்தை சேர்ந்த சுகாதார பணியாளர்களுக்கு இலவச வேட்டி,சேலை மற்றும் இனிப்பு, பட்டாசு வழங்கினார். இந்நிகழ்ச்சியின்போது நவநீதன், முருகானந்தம், குமார் உள்ளிடோர் உடன் இருந்தனர்.