×

சுரங்கப்பாதையில் நீர் கசிவு

உடுமலை,அக்.27: உடுமலையில் தளி ரோடு மேம்பாலத்தின்கீழ், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு செல்வதற்காக இரு சக்கர வாகனங்கள், கார்கள் செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையில் மழைக்காலங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கிவிடுகிறது. சமீபத்தில் பெய்த மழை காரணமாகவும் தண்ணீர் தேங்கி இருந்தது. தொடர்ந்து 2 நாட்களாக வெயில் அடித்ததால் தண்ணீர் வற்றிவிட்டது.

இந்நிலையில், சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவரில் நீர்க்கசிவு ஏற்படுகிறது. மழையின் காரணமாக பூமி ஈரப்பதத்துடன் இருப்பதாலும், அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்தும் நீர்க்கசிவு ஏற்படுவதாக தெரிகிறது. இதனால் பக்கவாட்டுசுவர் பலவீனமடையும் நிலை உள்ளது. எனவே, உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் நீர்க்கசிவுக்கான காரணத்தை கண்டறிந்து, அதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Water leakage ,tunnel ,
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!