×

பழங்குடி மக்களுக்கு தீபாவளி பரிசு

மஞ்சூர், அக்.27:  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பழங்குடி மக்களுக்கு பரிசு பொருட்களை மஞ்சூர் போலீசார் வழங்கினர். மஞ்சூர் அருகே உள்ள தனயகண்டி, தும்பனேரி கம்பை பகுதிகளில் மலைவாழ் பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவர்களுக்கு காவல்துறை சார்பில் பரிசு பொருட்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மஞ்சூர் இன்ஸ்பெக்டர் தவுலத்நிஷா தலைமை தாங்கினார். எஸ்.ஐ., சுதாகர் வரவேற்றார். தொடர்ந்து பழங்குடி மக்களுக்கு காவல்துறை சார்பில் இனிப்புகள் மற்றும் குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் போலீசார், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

Tags : Aboriginal People ,
× RELATED 37 பிரிவு பழங்குடியின மக்களின் சமூக...