×

நெடுஞ்சாலையில் ஓடும் கழிவுநீர்

ராஜபாளையம், அக்.25:  ராஜபாளையம் அருகே முத்துசாமிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர் தென்காசி செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். வாறுகால் வசதி இல்லாத காரணத்தினால் கடந்த பல ஆண்டுகளாக சாலையில் கழிவுநீர் சென்று சுகாதாரமற்ற நிலையில் இருந்து வருகிறது. கழிவுநீர் சாலைகளில் ஓடுவதால் அடிக்கடி பள்ளம் ஏற்பட்டு அப்பகுதியில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும்  பள்ளி மற்றும் வேலைக்கு செல்லக்கூடியவர்களின் மீது கழிவுநீர் வாகனங்களின் மூலம் தெளிப்பதால் அப்பகுதியில் நடமாட முடியாமல் அச்சப்பட்டு வருகின்றனர். இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து தற்போது அப்பகுதி மக்கள் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை, மாவட்ட நிர்வாகம்,  ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு பதிவு தபால் மூலம் புகார் அளித்துள்ளனர். எனவே உடனடியாக இப்பகுதியில் கழிவுநீர் செல்லும் வகையில் வாறுகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : highway ,
× RELATED கலவை- வாழைப்பந்தல் நெடுஞ்சாலையில் மரங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரிப்பு