×

கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள்

திருவில்லிபுத்தூர், அக்.25: திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் மனோகரன் மகன் பாண்டி(22). அதே பகுதியை சேர்ந்தவர் காமராஜ்(30). காமராஜ் குடும்பத்தோடு சிவகாசியில் வசித்து வந்துள்ளார். காமராஜின் தம்பி ஜெயசந்திரன். இவர் பாண்டியின் குடும்பத்து பெண்களை கேலி செய்துள்ளார்.

இது தொடர்பாக பாண்டி குடும்பத்திற்கும் காமராஜ் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2009ல் சிவகாசியில் இருந்து காமராஜ் மம்சாபுரத்திற்கு வந்துள்ளார். காளியம்மன் கோவில் அருகே வரும் போது அந்த வழியாக பாண்டியும் வந்துள்ளார். அப்போது பாண்டிக்கும் காமராஜூக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் அருகில் கிடந்த கல்லை எடுத்து காமராஜ் பாண்டி மீது போட்டு கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காமராஜை கைது செய்தனர். இந்த வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி முத்து சாரதா, காமராஜூக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags : plaintiff ,
× RELATED திருமண தகவல் மையம் மூலம் பெண்களை...