×

இடைத்தேர்தலில் வெற்றி அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திருச்சி, அக்.25: இரண்டு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து திருச்சியில் அதிமுகவினர் இனிப்புவழங்கி கொண்டாடினர்.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற்றது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அதன்படி, திருச்சி மாநகரில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி ெகாண்டாடினார்.

ரங்கம் சட்டமன்ற அலுவலகம் முன்பு அமைச்சர் வளர்மதி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். இதேபோல் அதிமுக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் சுப்பிரமணியபுரத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகம் முன்பு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் ஒன்றிய செயலாளர்கள் லால்குடி நடேசன், துறையூர் சேனை செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் இதில் கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : bye-election ,
× RELATED 10, 12-ம் வகுப்பில்...