×

கிணற்றில் விழுந்த பசு மாடு பலி

ஏர்போர்ட், அக்.25: திருச்சி மேலகல்கண்டார்கோட்டை பன்னீர்செல்வம் தெருவில் திருவிக தெருவை சேர்ந்த திருமூர்த்தி என்பவரது பசுமாடு ஒருவரது வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் மூழ்கி இறந்து கிடப்பதாக அப்பகுதியில் உள்ளவர்கள் கிராம விஏஓ பாலசுப்பிரமணியத்துக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற விஏஓ பாலசுப்பிரமணி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறந்து கிடந்த மாட்டை கயிறு மூலம் வெளியே தூக்கினர். ஆனால் அவர்கள் முயற்சி செய்தும் முடியாததால் அப்பகுதி இளைஞர்களை வரவழைத்து நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு அந்த மாட்டினை கிணற்றில் இருந்து வெளியில் கொண்டு வந்தனர். இதில் பசு வயிற்றில் கன்றுடன் இறந்திருப்பது தெரிய வந்தது. அதன் பிறகு அந்த பசுவை உடற்கூறு ஆய்விற்காக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : well ,
× RELATED “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை...