×

தொட்டியம் அருகே ரேஷன் கார்டுக்கு பொருட்கள் வழங்காமல் வாங்கியதாக பதிவு கலெக்டரிடம் புகார்

தொட்டியம், அக்.25: தொட்டியம் அருகே சீத்தம்பட்டி ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரருக்கு பொருட்கள் வாங்கியதாக பதிவானதையடுத்து பயனாளி ஒருவர் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளார். தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூர் அருகே சீத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல், எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவர் மனைவி பிரசவத்திற்காக கடந்த 3 மாதங்களாக அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதால் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க செல்லாமல் பழனிவேல் இருந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு பழனிவேல், பொருட்கள் வாங்க ரேஷன் கடைக்கு சென்றபோது இவரது குடும்ப அட்டையில் பொருட்கள் வாங்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து விற்பனையாளர் மற்றும் வருவாய்த்துறையினரிடம் பழனிவேல் அளித்த புகார் மீது எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து பழனிவேல் திருச்சி கலெக்டருக்கு பயனாளிகளின் குடும்ப அட்டைகளை தவறாக பயன்படுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென புகார் மனு அனுப்பியுள்ளார்.

Tags : Thottiyam ,
× RELATED தொட்டியம் தொகுதி அதிமுக மாஜி எம்எல்ஏ காத்தமுத்து காலமானார்