×

அரியலூர் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை: தன்னார்வலர்களுக்கு அழைப்பு

அரியலூர், அக்.25: அரியலூர் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட தன்னார்வலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ரத்னா அழைப்பு விடுத்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் ஊராட்சி மற்றும் சுகாதாரத்துறையின் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை தூய்மைப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் ரத்னா நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கலெக்டர் தெரிவித்ததாவது: அரியலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து, நகராட்சி மற்றும் ஊராட்சி பணியாளர்களுடன் வீடு, வீடாகச் சென்று வீடுகளில் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து, கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஏடிஎஸ் கொசு நல்ல நீரில் உற்பத்தியாவதால் அனைத்து கிராம மற்றும் நகர்ப்புற இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க டெங்கு காய்ச்சல் உற்பத்தியாகும் மூலங்களான தெளிந்த நீர்தேக்கத்தொட்டிகள், சுத்தமான நீர் தேங்கும் பகுதிகளான பயன்பாடற்ற பானைகள், உரல்கள், குளிர்சாதன பெட்டிகளின் பின்புறம், பழை டயா;, தேங்காய் மட்டைகள், செடிகள், வளர்க்கப்படும் தொட்டிகளின் வடிதட்டு, புதிய கட்டுமானப்பணிகள் நடக்கும் இடங்கள் மற்றும் கட்டிடங்களின் மேல்தளம், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகள் ஆகியவற்றில் நீர் தேங்காமல் உறுதி செய்து டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் விதமாக பொதுமக்கள் தங்கள் வீட்டைச்சுற்றி தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

அரசுத்துறை அலுவலர்கள் தலைமையில் ஒவ்வொரு வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தனியார் இடங்களில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாவது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். மேலும், அந்த ஊராட்சி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆகையால் பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்தை சுத்தமாகவும், மழைநீர் தேங்கா வண்ணம் வைத்திருக்க வேண்டும். அரசு பணியாளர்களும் தங்கள் மேற்பார்வையில் உள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணித்து எடிஎஸ் கொசுக்கள் வராத வண்ணம் கண்காணிக்க வேண்டும்.
நேற்று உடையார்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் ஆண்டிமடம் ஒன்றியம், இலையூர், புதுக்குடி ஆகிய கிராமங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் தூய்மையான குடிநீர் வழங்கப்படுவதையும், வீடுவீடாகவும், திறந்தவெளிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம மற்றும் நகர்ப்புற பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபத்திக்கொள்ள விருப்பமுள்ள தன்னார்வ இளைஞர்கள், இளைஞர் அமைப்புகள், இளைஞர் நற்பணி மன்றங்கள், நேரு யுவ கேந்திரா போன்ற அமைப்புகள் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலருடன் தொடர்பு கொண்டு சேவை செய்திட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின்போது, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் ஹேமசந்த்காந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு குளோரியா, உடையார்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, ஊராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags : Ariyalur District ,Volunteers ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...