×

குமுளி மலைச்சாலையில் வாகனம் மோதி மிளா மான் பலி

கூடலூர், அக்.25: குமுளி மலைச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையை கடக்க முயன்ற மிளா மான் உயிரிழந்தது.தேனி மாவட்டம் லோயர்கேம்பிலிருந்து தமிழக எல்லையான குமுளிக்கு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி வழியாக 6 கி.மீ தூர மலைச்சாலை செல்கிறது. இப்பகுதியில் அதிகளவில் காட்டு யானைகள், காட்டுப்பன்றிகள் மற்றும் மிளாக்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று காலை குமுளி மலைச்சாலை ஆரம்பிக்கும் பகுதியில் உள்ள பென்னிகுக் மணிமண்டபம் அருகே சாலையை கடக்க முயன்ற 2 சுமார் வயதுடைய மிளா மான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த மிளா மான் துடிதுடித்து இறந்தது.தகவலறிந்து வந்த கம்பம் மேற்கு வனத்துறையினர் இறந்த மிளா மானின் உடலை கைப்பற்றி கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர் உலகநாதன் உடற்கூறு சோதனைக்குபின்னர், வனப்பகுதியில் உடல் புதைக்கப்பட்டது. இதுகுறித்து கம்பம் மேற்கு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags :
× RELATED மூணாறில் மழவில் இரும்பு பாலத்தை புனரமைக்க கோரிக்கை