சிவகங்கை, அக். 25: சிவகங்கையில் கல்வி மாவட்ட சாரண இயக்க பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமை வகித்தார். தனியார் பள்ளி முதல்வர் பிரமிளா வரவேற்றார். மாவட்ட செயலாளர் பொக்கிஷம் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். வட்டார அளவில் சாரண ஒருங்கிணைப்பாளர்கள் நியமிப்பது, அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள சாரண ஆசிரியர்களுக்கு அடிப்படைப் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில நல்லாசிரியர் விருது பெற்ற சாரண இயக்க மாவட்ட செயலாளர் பொக்கிஷம், பொருளாளர் அருளானந்தம் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். மாவட்ட கௌரவத் தலைவர் கண்ணப்பன், தலைவர் கணேசன் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.