சிவகங்கை, அக். 25:சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சிவகங்கை மாவட்ட தனியார் மருந்தகங்கள் (ெமடிக்கல்ஸ், பார்மசி) மற்றும் தனியார் மருத்துவமனை மருந்தக உரிமையாளர்களுக்கான டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் யசோதாமணி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மருந்து துறை, நகராட்சி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள், மருந்தக உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.