×

மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கூடலூர், அக்.25:  தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கூடலூர் கிளை சார்பில் ஓய்வூதியர்களுக்கு வைரவிழா ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை சீர்செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும், இடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கூடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொருளாளர் கார்லஸ் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். தலைவர் தீபன் வரவேற்றார். மண்டல செயலாளர் கோவை மைக்கேல் சிறப்புரையாற்றினார். இதில் 50க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் ஜவரன் நன்றி கூறினார்.

Tags : Electro Retirement Welfare Organization ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...