×

டெய்லர் கொலை வழக்கில் கைதான நண்பர் சிறையில் அடைப்பு

திருப்பூர்,அக்.25: திருப்பூரில் டெய்லர் கொலை வழக்கில் கைதான நண்பர் சிறையில் அடைக்கப்பட்டார். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இன்பவளவன் (எ) ராஜா (36). இவருக்கு திருமணமாகவில்லை. இவர் திருப்பூர் சிறுபூலுவபட்டி பகுதியில் தங்கி பின்னாலடை துணிகளை தைத்து கொடுத்து வந்தார். கடந்த சில நாட்களாக இவரின் கடை பூட்டப்பட்டிருந்தது. திடீரென ராஜாவின் கடைக்கு வெளியில் கடுமையான துர்நாற்றம் வீசியது.

தகவலறிந்த 15 வேலம்பாளையம்  போலீசார் கடையின் பூட்டை உடைத்து பார்த்தபோது ராஜா அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். போலீசார் உடலை கைப்பற்றி  விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்தனர். அப்போது ராஜாவின் நண்பரான கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் (38) என்பவர் ராஜாவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மகேந்திரனை போலீசார் கைது செய்தனர். ராஜா தனது மனைவியை அவதூறாக பேசியதால் கொன்றதாக மகேந்திரன் வாக்குமூலம் அளித்தார். கைதான அவரை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Taylor ,
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...