×

டிஆர்ஓ துவக்கி வைத்தார் கறம்பக்குடி பேரூராட்சியில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்

கறம்பக்குடி, அக். 25: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் சடையன் தெரு, அக்ரஹாரம், தென்னகர், நரங்கியப்பட்டு, வடக்கு தெரு, கண்டியன் தெரு உள்ளிட்ட பல வார்டுகள் உள்ளன. இந்த அனைத்து வார்டு பகுதிகளில் கடந்த பல மாதங்களாக தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கடந்த சில வருடங்களாக பேரூராட்சி மூலம் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்காததால் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் நாய்கள் அதிகம் உருவானதன் காரணமாக பொது மக்கள், வியாபாரிகள் மற்றும் மாணவ, மாணவிகள் பெண்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப் பட்டு உள்ளனர்.

சில நேரங்களில் நாய்கள் தெரு வழியாக நடந்து செல்பவர்களை கடித்து விடுவதன் காரணமாக மருத்துவமனைக்கு செல்லும் அவல நிலைக்கு ஆளாகி உள்ளனர். மேலும் சில நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் கூட பாதிக்கப் படுகின்றனர். கறம்பக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் நலன் கருதியும், வாகன ஓட்டிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மேலும் நடந்து செல்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொது மக்கள் நலன் கருதியும் பேரூராட்சி நிர்வாகம் அதிகரித்து வரும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நாய்கள் தொல்லையில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என பொது மக்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : TRO ,Karambakkudy ,
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...