கந்தர்வகோட்டை, அக்.25: கந்தர்வகோட்டையிலிருந்து ஊரணிபுரத்திற்கு சென்ற அரசு டவுன் பஸ்சை டிரைவர் கோவிந்தராஜ் என்பவர் ஓட்டி சென்றார். அப்போது, குடிபோதையில் பஸ்சின் படிகட்டில் சிவந்தான்பட்டியை சேர்ந்த அருணகிரி மற்றும் முருகேசன் ஆகியோர் பயணித்தனர். அவர்களை உள்ளே வரும்படி கூறிய டிரைவரிடம் வாக்குவாதம் செய்து, தகராறில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அருணகிரி,முருகேசன் ஆகியோரை பிடித்து சென்று விசாரித்து வருகின்றனர்.