×

மாநில அளவிலான கராத்தே போட்டி சாதனை மாணவர்களுக்கு பாராட்டு நேர விரயத்தால் பயணிகள் அவதி

பொன்னமராவதி,அக்.25: சேலத்தில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில் சாதனை படைத்த பொன்னமராவதி வலையபட்டி சிதம்பரம் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. டீம்கட்டா, டீம்குமிட்டி, தனிநபர்கட்டா, தனிநபர்குமிட்டி ஆகிய போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களும் சான்றிதழ்களும் பெற்று வந்துள்ளனர்.

அந்த மாணவர்களையும், அவர்களை பயிற்றுவித்த கராத்தே ஆசிரியர் செல்லப்பாண்டியனையும் பள்ளி முதல்வர் முருகேசன், தனி அலுவலர் சந்திரன், துணை முதல்வர்கள் வைதேகி, கலைமதி உடற்கல்வி இயக்குநர்கள் ரவிச்சந்திரன், சக்திவேல், ஆசிரியர் தீபா, சிலம்பம் ஆசிரியர் மதுரைவீரன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

Tags :
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு