×

குடியாத்தத்தில் 1 லட்சம் செக் மோசடி செய்தவருக்கு 2 ஆண்டு சிறை

குடியாத்தம், அக்.25: குடியாத்தத்தில் ₹1 லட்சம் செக் மோசடி செய்தவருக்கு 2 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.குடியாத்தம் அருணாசலம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத்(50). இவரது நண்பர் ராணிப்பேட்டை அக்ராவரம் கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன்(45). கடந்த 2011ம் ஆண்டு சம்பத்திடம், பரசுராமன் ₹1.50 லட்சம் கடன் வாங்கினாராம்.இதையடுத்து பரசுராமன் தான் வாங்கிய கடனில் இருந்து ₹1 லட்சத்திற்கு கடந்த 2012ல் காசோலை கொடுத்தார். பின்னர், செக்கை சம்பத் தனது வங்கியில் செலுத்தினார். ஆனால் பரசுராமன் கணக்கில் பணம் இல்லாமல் செக் திரும்பி வந்தது. இதனால் சம்பத், குடியாத்தம் நடுவர் நீதிமன்றத்தில் பரசுராமன் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை குடியாத்தம் நடுவர் நீதிமன்ற நடுவர் செல்லப்பாண்டியன் விசாரித்து பரசுராமனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் ₹2 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags : fraudster ,Czech ,jail ,
× RELATED வேலூர் சிறைக்குள் செல்போன் வீச முயற்சி: போலீசார் விசாரணை