×

லாரி மோதி டயர் கடை உரிமையாளர் பலி

ஈரோடு, அக். 25: ஈரோடு பி.பெ. அக்ரஹாரம் ஈதுகா வீதியை சேர்ந்தவர் யாசின் (39). இவர், ஈரோடு மூலப்பட்டறையில் டயர் கடை வைத்து நடத்தி வந்தார். யாசின் நேற்று காலை அவரது பைக்கில் நசியனூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். இடையன்காட்டு வலசு ராஜகணபதி கோயில் அருகே சென்றபோது,  எதிரே வந்த டிப்பர் லாரி, எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில், யாசின் நிலை தடுமாறி ரோட்டில் விழுந்தார். அப்போது, லாரியின் சக்கரம் யாசின் தலை மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஜிஹெச் போலீசார், யாசினின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கருங்கல்பாளையம் சந்தையில் 95 % மாடுகள் விற்பனைஈரோடு, அக்.25: ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் 95 சதவீத மாடுகள் நேற்று விற்பனையானது. இதனால்,  வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி அருகே வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறும். இதில், புதன்கிழமை வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவை மாடுகளும் விற்பனை செய்யப்படும். இந்த சந்தைக்கு ஈரோடு மற்றும் மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதியை சேர்ந்தவர்களும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். மாடுகளை தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கோவா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்து வாங்கி செல்வர். வாரந்தோறும் சராசரியாக ஆயிரம் மாடுகளுக்கு மேல் விற்பனையாகும். இந்நிலையில், ஈரோடு மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் சந்தைக்கு மாடுகள் வரத்து தொடர்ந்து சரிந்தது. இதில், நேற்று நடந்த சந்தையில் 550 மாடுகளே விற்பனைக்கு வந்தது.

இது குறித்து கருங்கல்பாளையம் மாட்டு சந்தை மேலாளர் முருகன் கூறுகையில், `தொடர் மழையின் காரணமாக, சந்தைக்கு இந்த வாரம் பசு 300, எருமை 100, கன்று 150 என 550 மாடுகளே விற்பனைக்கு வந்ததால் வரத்து பாதியாக குறைந்தது. தமிழக அரசின் விலையில்லா கறவை மாடுகள் திட்டத்தின்கீழ் ஈரோடு அடுத்த உச்சாண்டாம்பாளையம், தென்காசி மாவட்டம் குற்றாலம், திருநெல்வேலி போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் கால்நடை துறை அதிகாரிகளுடன் வந்து மாடுகளை வாங்கி சென்றனர்.மேலும், ஆந்திரா, கேரளா, தெலங்கானா போன்ற மாநில வியாபாரிகள் வழக்கம் போல் மாடுகளை வாங்கி சென்றனர். இதனால், சந்தையில் வரத்தான மாடுகளில் 95 சதவீதம் விற்பனையாது. மழை காலம் முடியும் வரை மாடுகள் வரத்து குறைவாக தான் இருக்கும்’ என்றார்.

Tags : Lorry ,tire shop owner ,
× RELATED மார்த்தாண்டம் லாரி பேட்டை முன்...