தூத்துக்குடி, அக். 25: நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை தூத்துக்குடி மாவட்டத்தில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்பேரில் முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளர் ஆறுமுகநயினார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் தூத்துக்குடி டூவிபுரம் 7வது தெரு, தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் பகுதியிலும், தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலகம் முன்பும் பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இதில் முன்னாள் நகரச் செயலாளர் ஏசாதுரை, பகுதி செயலாளர் பொன்ராஜ், இலக்கிய அணி மாவட்டச் செயலாளர் நடராஜன், மருத்துவ அணி செயலாளர் டாக்டர் ராஜசேகர், அண்ணா தொழிற்சங்க பிரிவு மாவட்டச் செயலாளர் டேக் ராஜா, வக்கீல் பிரிவு மாவட்டத் தலைவர் முள்ளக்காடு செல்வக்குமார், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட இணைச் செயலாளர் வீரபாகு, எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட இணைச் செயலாளர் சத்யா லட்சுமணன், மாவட்ட அரசு வக்கீல்கள் சுகந்தன் ஆதித்தன், கோமதிமணிகண்டன், தலைமை கழக பேச்சாளர் கருணாநிதி, மகளிர் அணி செரினா பாக்கியராஜ், முன்னாள் நகர்மன்றத் தலைவர் மனோஜ்குமார், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் தனராஜ், பிரபாகர், மாவட்டப் பிரதிநிதிகள் வக்கீல் முனியசாமி, கண்ணையா, ஜான்சன், தேவராஜ், கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் அய்யனடைப்பு ராஜேந்திரன், மாநகர மேற்கு பகுதி அவைதலைவர் சந்தானம், அருண்ஜெபக்குமார், கே.டி.சி.ஆறுமுகம், கே.ஏ.பி.ராதா, முன்னாள் கவுன்சிலர்கள் சுடலைமணி, முபாரக்ஜான், பெரியசாமி, கோல்டன் அருள்தாஸ், சந்தனப்பட்டு, ஆனந்தகுமார், பிச்சையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி தற்காலிக பஸ்நிலையம் முன் நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு மாநில அமைப்புச் செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். இதில் பகுதி செயலாளர்கள் முருகன், சேவியர், வக்கீல் அணி மாவட்ட நிர்வாகிகள் ஆன்ட்ரூ மணி, மந்திரமூர்த்தி, ராஜாராம், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், பேரவை மாவட்ட துணைச்செயலாளர் ஜீவபாண்டியன், மாவட்டப் பிரதிநிதி சேவியர்ராஜ், மேற்கு பகுதி துணைச் செயலாளர் கணேசன், மாவட்ட இளைஞர் அணி மூர்த்தி, மில்லைராஜா, மேலூர் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குநர்கள் அன்புலிங்கம், சந்தனம், பாலசுப்பிரமணியன், பேச்சாளர் முருகானந்தம், முன்னாள் கவுன்சிலர்கள், செல்லப்பா, ஜெயக்குமார், சந்திராபொன்ராஜ், லிங்கராஜ், சகாயராஜ், டேவிட் யேசுவடியான், போக்குவரத்து நிர்வாகிகள் டெரன்ஸ், சங்கர், சண்முகராஜ், அந்தோணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கோவில்பட்டி: கோவில்பட்டியில் வடக்கு மாவட்டச் செயலாளரான அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவுறுத்தலின்படி, நகரச் செயலாளர் விஜயபாண்டியன் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து மக்களுக்கு இனிப்பு வழங்கினர். உடன்குடி: உடன்குடியில் நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் முருங்கை மகாராஜா தலைமை வகித்தார். மாவட்ட பனைவெல்லம் கூட்டுறவு சம்மேளனத் தலைவர் தாமோதரன், அண்ணா மின்வாரிய தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் வெள்ளத்துரை, குலசேகரன்பட்டினம் ஊராட்சி செயலாளர் சங்கரலிங்கம், ஜெ.,பேரவை நகரச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் துணை சேர்மன் ராஜதுரை முன்னிலை வகித்தனர். இதையடுத்து பொதுமக்களுக்கு எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளர் செல்லத்துரை இனிப்பு வழங்கினார். இதில் தலைமைக்கழக பேச்சாளர்கள் பொன்ராம், பால்துரை, ஊராட்சிக் செயலாளர்கள் அமிர்தா மகேந்திரன், ராஜ்குமார், தாமோதரன், மாவட்ட எம்ஜிஆர்மன்ற துணைச் செயலாளர் மூர்த்தி, உடன்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் சாமுவேல், நிர்வாகிகள் தங்கத்துரை, சுயம்புலிங்கம், நாகராஜன், முத்துக்குமார், பெலிக்ஸ், சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நாசரேத்: நாசரேத்தில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு நகரச் செயலாளர் கிங்ஸ்லி தலைமை வகித்தார். ஆழ்வை ஒன்றியச் செயலாளர் ராஜ்நாராயணன், ஜெ. பேரவை ஒன்றியச் செயலாளர் ராமகோபால், முன்னாள் யூனியன் சேர்மன் விஜயகுமார், ஜெ. பேரவை முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஞானையா முன்னிலை வகித்தனர். இதில் தென்திருப்பேரை ஜெ.பேரவை செயலாளர் கந்தன், பெரியதுரை, தினகரன், முருகேசன், குமரன், வின்சென்ட், ஜெபா, கோபால், ஜெயராஜ், அர்ஜீன் சங்கர், ராஜ்குமார், அப்பலோஸ், சண்முகம், கிருபா, ராஜன், மனோ, இசக்கி, ரவீந்திரன், கணேசன், செல்லப்பா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.வைகுண்டம்: ஆழ்வார்திருநகரியில் நடந்த நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் செந்தில்ராஜகுமார், முன்னாள் தொகுதி இணைச்செயலாளர்கள் ராஜப்பாவெங்கடாச்சாரி, பாலசுப்பிரமணியன், வார்டு செயலாளர்கள் இரட்டைமுத்து, அடைக்கலம், சிவசுப்பிரமணியன், அனந்தவெங்கடாச்சாரி, விஸ்வநாதன், பெரியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சாத்தான்குளம்: சாத்தான்குளம் பழைய பஸ்நிலையத்தில் ஒன்றியச் செயலாளர் அச்சம்பாடு சவுந்திரபாண்டி தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து மக்களுக்கு இனிப்பு வழங்கினார். சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பொன்முருகேசன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். இதில் நகர அவைத்தலைவர் சோமசுந்தரம், ஜெ. பேரவை நகரச் செயலாளர் அப்துல்சமீது, ஒன்றிய அவைத்தலைவர் பரமசிவ பாண்டியன், நிர்வாகி சின்னத்துரை, இளைஞர் அணி ஒன்றியச் செயலாளர் பாலகிருஷ்ணன், பாசறை ஒன்றியச் செயலாளர் மகாராஜா, புதுக்குளம் ஊராட்சி முன்னாள் தலைவர் பாலமேனன், முன்னாள் பள்ளக்குறிச்சி ஊராட்சி செயலாளர் அன்னகணேசன், நகர துணைச் செயலாளர் தியாகராஜன், கிளைச் செயலாளர் பால்துரை,சுடலைக்கண், மோகன்ராஜ், பேச்சிமுத்து, பாஜ நகரத் தலைவர் ராம்மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.