×

கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 2 உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி, அக். 25: கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்துக்கு நவம்பர் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது. இங்கு இந்தாண்டுக்காகன கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 2ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு, அன்றையதினம் தூத்துக்குடி மாவட்டத்தில் பணிநாளாக இயங்கும் கல்வி நிறுவனங்கள், சுகாதாரத்துறை, மின்வாரியம் மற்றும் இதர அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக டிசம்பர் 14ம் இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Tags : Kanda Sashti Festival ,holidays ,
× RELATED பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல்...