×

மண்டைக்காடு அருகே சந்தன மரம் திருட்டு

குளச்சல், அக்.25: மண்டைக்காடு அருகே   பருத்திவிளையை சேர்ந்தவர் வீரபத்திரன்(71). இவருக்கு சொந்தமான  தென்னந்தோப்பு வீட்டின் அருகே உள்ளது. இந்த தோப்பில் சந்தன மரங்களும்  நின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் வீரபத்திரன் தோப்புக்கு சென்று மரங்களை  பார்வையிட்டார். அப்போது மர்ம நபர்களால் சந்தன மரம் வெட்டி கடத்தி சென்றுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் மண்டைக்காடு  போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Tags : Mandaikkad ,
× RELATED மண்டைக்காட்டில் பூட்டிய வீட்டில்...