×

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்திய 188 கிலோ கஞ்சா பறிமுதல்

புழல், அக். 25: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 188 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக காருக்குள் இருந்த 2 பேரை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி  வருகின்றனர்.  
சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை நல்லூர் சுங்கச்சாவடியில் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து செங்குன்றம் நோக்கி அதிவேகமாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தபோது 188 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீஸ் விசாரணையில், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்துவது தெரிந்தது. இதுதொடர்பாக, ராமசிவா (26), முரளி (36) ஆகியோரை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி வாகன ஓட்டிகள்  மத்தியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags : Chennai ,Andhra Pradesh ,
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...