×

புழல் சிறை கைதி பலி

புழல், அக். 25: புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கைதி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.  புழல் விசாரணை சிறையில் சுமார் 1800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அடுத்த கிளாம்பாக்கம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சங்கர் (31) என்பவர் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை  விற்பனை செய்ததாக சூனாம்பேடு போலீசார் கைது செய்து கடந்த 19ம் தேதி புழல் சிறையில் அடைத்தனர்.

அன்றைய தினமே சங்கருக்கு வலிப்பு நோய் வந்ததால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சங்கர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிறை ஜெயிலர் அப்துல் ரகுமான் புழல்  காவல் நிலைத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Pussy prisoner ,
× RELATED புழல் சிறை கைதி மரணம்