×

திருநின்றவூர் பகுதி ஆற்றில் மணல் திருடிய லாரி பறிமுதல்

ஆவடி, அக். 25: ஆவடி அருகே, திருநின்றவூர் பகுதி ஆற்றில் மணல் திருடிய லாரி, பொக்லைனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய 6 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.    ஆவடி அடுத்த திருநின்றவூர் ராஜாகுப்பம் பகுதி ஆற்றில் மணல் திருட்டு நடைபெறுவதாக நேற்று முன்தினம் திருநின்றவூர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து எஸ்ஐ நாகராஜன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, 3 லாரிகளில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மணலை மர்ம கும்பல் திருடி கொண்டிருப்பது தெரிய வந்தது. பின்னர்,  அவர்கள் போலீசாரை பார்த்தவுடன்  அங்கிருந்து மணலை கொட்டி விட்டு தப்ப முயன்றனர்.

  போலீசார் விரட்டியதில் லாரி, பைக்லைனை விட்டுவிட்டு தப்பி சென்றனர். பின்னர் மணல் திருடிய 3 லாரிகள், 3 பொக்லைனை போலீசார் கைப்பற்றி திருநின்றவூர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தினர். இதில் ஆற்று மணலை திருடியவர்கள் பட்டாபிராம் அருகே சித்துக்காடு கிராமத்தை சேர்ந்த அனுமந்த் (45) தலைமையிலான 6 பேர் கும்பல்  என தெரிந்தது. அவர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Tags : Thiruninvur ,area ,
× RELATED வாட்டி வதைக்கும்...