×

இரும்பு கம்பியால் மண்டையை உடைத்து வாலிபரிடம் செல்போன் பறிப்பு

அம்பத்தூர், அக். 25: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனியார் நிறுவன ஊழியரை இரும்பு ராடால் தாக்கி செல்போன் பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.அம்பத்தூர் அடுத்த முகப்பேர் ரெட்டிபாளையத்தில் வசிப்பவர் மணிபாலன் (26). அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள பிரபல ஸ்வீட் கடைக்கு இனிப்பு தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.  நேற்று முன்தினம் அதிகாலை 5  மணிக்கு மணிபாலன் வீட்டில் இருந்து வேலைக்கு  புறப்பட்டார். அம்பத்தூர் தொழிற்பேட்டை, வாவின் சந்திப்பு அருகே நடந்து வந்தபோது பைக்கில் வந்த 3 பேர் இவரை வழிமறித்து பாக்கெட்டில் இருந்த செல்போனை கேட்டுள்ளனர்.

மணிபாலன் செல்போனை கொடுக்க மறுத்ததால் 3 பேரும் சேர்ந்து அவரை இரும்பு ராடால் தாக்கியுள்ளனர். இதில் மண்டை உடைந்து ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதையடுத்து மர்ம நபர்கள் அவரது பாக்கெட்டில் இருந்த செல்போனை  எடுத்துக்கொண்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். புகாரின்பேரில் அம்பத்தூர்  தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி செய்த நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : plaintiff ,
× RELATED திருமண தகவல் மையம் மூலம் பெண்களை...