×

செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நிலவேம்பு கஷாயம் வினியோகம்

செங்கல்பட்டு, அக் 25: செங்கல்பட்டு  நகராட்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வழக்கறிஞர் சங்கம்  சார்பில் நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது. வழக்கறிஞர் சங்க தலைவர்  சொக்கலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் ஆனந்தீஸ்வரன் முன்னிலை வகித்தார். நகராட்சி நகர் நல அலுவலர் சித்திர சேனா வரவேற்றார்.மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்த லீலா கலந்து கொண்டு, வழக்கறிஞர்கள், பொதுமக்களுக்கு  நிலவேம்பு கஷாயம் வழங்கினார். பின்னர் டெங்கு காய்ச்சலை தடுக்க கொசுக்களை உருவாக்கும் இடங்களை சுத்தமாக வைத்துக்  கொள்ளவது என அனைத்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதில் நீதிபதிகள். வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Chengalpattu District Court ,
× RELATED உறவினருக்கு சாதகமான செயல்பாடு...