×

வதிலையில் நிலவேம்பு

வத்தலக்குண்டு, அக். 25: வத்தலக்குண்டு அரசு மருத்துவமனை, காவல்துறை இணைந்து நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது. வத்தலக்குண்டு காவல்நிலையத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் தலைமை வகிக்க, டாக்டர் வசந்த்மில்டன்ராஜ், சப்இன்ஸ்பெபக்டர் கலையரசன், வதிலை பசுமை இயக்கம் சேர்மன் மருதராஜன் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு நிலை மருந்தாளுநர் முகமது அலி, ஜிஹெச் பணியாளர்கள் தயாநிதி, ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் போலீசார், பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

Tags : Earthquake ,
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்