×

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் முதல்வரின் மக்கள் நல பணிகளால் வெற்றி

சேலம், அக்.25:தமிழக முதல்வரின் மக்கள் நலப்பணிகளால் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது என்று வெங்கடாஜலம் எம்எல்ஏ தெரிவித்தார்.விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் எம்எல்ஏ தலைமையில் அண்ணா பூங்கா அருகே உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இது குறித்து வெங்கடாஜலம் எம்எல்ஏ கூறுகையில், ‘‘மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் பாடுபட்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மக்கள் நலப்பணி காரணமாக 2 சட்டமன்றத் தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளார். இதற்காக வாக்காளர்களுக்கு நன்றி ெதரிவித்துக் கொள்கிறோம்,’’ என்றார்.

நிகழ்ச்சியில் சக்திவேல் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராஜ், ஆர்.ஆர்.சேகரன், முன்னாள் மேயர் சவுண்டப்பன், பகுதி செயலாளர்கள் தியாகராஜன், சண்முகம், யாதவமூர்த்தி, சரவணன், சேலம் ஒன்றிய துணை தலைவர் பாலகிருஷ்ணன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் வே.பிரிட்ஜ் ராஜேந்திரன், ராம்ராஜ், கென்னடி, கே.சி.செல்வராஜ், மாநகர பொருளாளர் பங்க் வெங்கடாஜலம், முன்னாள் கவுன்சிலர்கள் பாலு, கிருஷ்ணமூர்த்தி, ஜமுனா ராணி, முருகேசன், மாரியப்பன், கிருபாகரன், பேரவை செயலாளர் சரவணமணி உள்பட ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.மேட்டூர்: மேச்சேரியில், முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் கலையரசன், சந்திரசேகரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் குமார் ஆகியோர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் முன்னாள் ஒன்றிய செயலாளர் அண்ணாமலை, பேரூர் செயலாளர் மாணிக்கம், முன்னாள் பேரூர் செயலாளர் சாமியண்ணன், ஒன்றிய பாசறை செயலாளர் செல்வம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மணிவண்ணன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் சின்னத்தம்பி, சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Vikravandi ,victory ,Nankuneri ,
× RELATED பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 3 வாலிபர்கள் கைது: 3 கிலோ பறிமுதல்