×

ஆசிரியர் காலனியில் மண்பாதையை தார்சாலையாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை

திருச்செங்கோடு, அக்.25: திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் கொன்னையார் கிராமம் ஆசிரியர் காலனியில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த காலனி அமைந்து 25 வருடங்கள் ஆகியும், இதுவரை தார்சாலை அமைக்கப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் கலெக்டரிடம் பலமுறை இப்பகுதி மக்கள் கோரிக்கை மனுக்கள் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த சாலை வழியாக தான் மாணவ,மாணவிகள்  பள்ளிக்கு செல்ல வேண்டும். மழைக்காலங்களில் மண்பாதை சேறும், சகதியுமாக மாறி இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, இங்குள்ள மண்பாதையை உடனடியாக தார்சாலையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா