×

2 தொகுதியில் வெற்றி அதிமுகவினர் கொண்டாட்டம்

நாமக்கல், அக்.25: நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதையொட்டி, நாமக்கல்லில் எம்எல்ஏ பாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நாமக்கல் மணிக்கூண்டு அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்எல்ஏ பாஸ்கர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மயில்சுந்தரம், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் சேகர், நகர கூட்டுறவு வங்கி தலைவர் கண்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் சாதிக்பாட்சா, லியாகத்அலி, மாதேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத், நல்லிபாளையம் கூட்டுறவு சங்க தலைவர் விஜயகுமார், முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் ராஜா உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
ராசிபுரம்: ராசிபுரம் நகர அதிமுக செயலாளரும், நகர கூட்டுறவு வங்கித் தலைவருமான பாலசுப்பிரமணியம் தலைமையில், புதிய பஸ் நிலையம் முன்பாக உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பட்டாசு வெடித்தும், பொதுமக்கள், பஸ் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இதில், சூப்பர் பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் செல்வம், நகர கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் கோபால், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.சேந்தமங்கலம்: விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, சேந்தமங்கலத்தில் அதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமையில், அதிமுகவினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நகர செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Celebration ,victory ,constituencies ,
× RELATED மாமல்லபுரத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்