×

பள்ளிபாளையத்தில் ஆதரவற்ற முதியவர் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு

பள்ளிபாளையம், அக்.25:பள்ளிபாளையம்  பக்கமுள்ள மொளசி கோரக்குட்டை பெருமாள் மலையில், சுமார் 60 வயதான மனநிலை சரியில்லாத முதியவர்,  பிச்சையெடுத்து வந்தார். இவருக்கு திடீரென  உடல்நிலை சரியில்லாமல் போனதால், அங்குள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கடந்த 7ம்தேதி திருச்செங்கோடு அரசு  மருத்துமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக  அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர  சிகிச்சை பலனின்றி, அவர் கடந்த 16ம்தேதி அவர் உயிரிழந்தார்.  இறந்து போனவர் மருத்துவமனையில் தனது பெயர் பிச்சைக்காரன் என்றும் தனது  தந்தை பெயர் மன்னாடி என்றும், சொந்த ஊர் விழுப்புரம் எனவும்  தெரிவித்துள்ளார். மொளசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டனர்.விழுப்புரத்தில் இவர் குறித்து ஒருவருக்கும் தெரியவில்லை.  இறந்து போனவரின் புகைப்படத்தோடு போலீசார் நோட்டீசு வெளியிட்டனர். ஆனால்  இவரது உடலை பெற்றுக்கொள்ள ஒருவரும் வரவில்லை. கடந்த 10நாட்களாக சேலம் அரசு  மருத்துவமனையில் உள்ள அவரது சடலத்தை பெற்றுக்கொள்ள யாரும் வராததால், அனாதை என அறிவித்து  போலீசாரே இறுதி சடங்கினை மேற்கொள்ள உள்ளனர்.

Tags : school ,orphan ,
× RELATED தீயணைப்பு துறையினர் அணைத்தனர்...