×

பல வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளையன் அதிரடி கைது 19 பவுன் நகைகள் மீட்பு

நாமக்கல், அக்.25:  நாமக்கல் மாவட்டத்தில், பல இடங்களில் வீடு புகுந்து நகை திருடிய கொள்ளையனை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 19 பவுன் நகையை மீட்டுள்ளனர்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள காட்டூர் பெரிய பணக்காரர் தோட்டத்தை சேர்ந்த முரளி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து, கடந்த மாதம் 4ம் தேதி, 3பவுன் செயினை மர்மஆசாமிகள் திருடி சென்றனர். இதேபோல், பள்ளிபாளையம் அருகே காடச்சநல்லூர் மகாலட்சுமி நகரை சேர்ந்த ஜான்பால் என்பவரது வீட்டில், 3 பவுன் செயின் திருடு போனது. மேலும் காடச்சநல்லூரைச் சேர்ந்த கருணாநிதி என்பவரது வீட்டில் 8 பவுன் நகையும், மல்லசமுத்திரம் அருகே கூத்தாம்பாளையம் கருமானூரை சேர்ந்த மாரிமுத்து வீட்டில் 4 பவுன்  நகையும் திருடு போனது.வீடு புகுந்து கைவரிசை காட்டும் நபரை கைது செய்ய, ராசிபுரம் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி, மல்லசமுத்திரம் எஸ்ஐ ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி, வீடு புகுந்து நகைகளை திருடி சென்றதாக மதுரை கூடல்நகரை சேர்ந்த மாயக்கண்ணன் (எ) வெற்றிவேல் (26) என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து  19 பவுன் நகை மீட்கப்பட்டது. வீடுகள் தோறும் கைவரிசை காட்டிய கொள்ளையனை கைது செய்த தனிப்படை போலீசாரை, மாவட்ட எஸ்பி அருளரசு பாராட்டி வெகுமதி அளித்தார்.

Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி