×

தீபாவளியையொட்டி ஆவின் மைசூர்பா விற்பனை துவக்கம்

கிருஷ்ணகிரி, அக்.25:  கிருஷ்ணகிரி ஆவின் நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில், தீபாவளி பண்டிகையையொட்டி சுத்தமான பசும்பாலின் நெய்யால் தயாரிக்கப்பட்ட சுவையுடன் கூடிய ஸ்பெஷல் மைசூர்பா விற்பனை துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்து, மைசூர்பா விற்பனையை துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: தீபாவளி பண்டிகையையொட்டி தயாரிக்கப்பட்டுள்ள ஸ்பெஷல் மைசூர்பா ஆவின் நவீன பாலகங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 250 கிராம் எடையுள்ள மைசூர்பாவின் விலை ₹120 என்ற குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், தரமான நெய் மற்றும் குலாப்ஜாமூன், ரசகுல்லா, பால்கோவா, வெண்ணெய்இ பாதாம் பவுடர் ஆகியவையும் தரமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இவை அனைத்தையும் ஆவின் நுகர்வோர்களும், பொதுமக்களும் வாங்கி தீபாவளி பண்டிகையினை சிறப்பாக கொண்டாட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், ஆவின் பொது மேலாளர் டாக்டர் குமரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ராமமூர்த்தி, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் டாக்டர் மனோகரன், ஆவின் விற்பனை மேலாளர்கள் ஜெய்விக்னேஷ், நாகராஜ், சாய்ராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Aavin Mysoreba ,Diwali ,
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...