×

சீமான் மீது காங்., புகார்

போச்சம்பள்ளி, அக்.25: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயற்குழு உறுப்பினர் ராமநாதன் மற்றும் கட்சியினர் போச்சம்பள்ளி போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மரணம் குறித்து ,நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ள கருத்து பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் உள்ளது. அவரது பேச்சு, நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாகும். எனவே, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சீமானை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Seaman ,
× RELATED சொல்லிட்டாங்க…