×

இடைத்தேர்தல்களில் வெற்றி அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தர்மபுரி,  அக்.25: விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, தர்மபுரியில் அதிமுகவினர் நேற்று இனிப்பு வழங்கி கொண்டாடினர்.நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் எம்எல்ஏ கோவிந்தசாமி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வெற்றிவேல், பூக்கடை ரவி, சிவப்பிரகாசம், பாமக மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர் பெரியசாமி, அரசாங்கம், மாநில துணை தலைவர் சாந்தமூர்த்தி,  தேமுதிக மாநில துணைத்தலைவர் டாக்டர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் தம்பி ஜெய்சங்கர், பாஜக மாவட்ட தலைவர் வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.காரிமங்கலம்: இதேபோல், காரிமங்கலம் மற்றும் பெரியாம்பட்டியில் அதிமுகவினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் குமார், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் ரவிசங்கர், முன்னாள் தலைவர்கள் காவேரி, செந்தில்குமார், நாகனம்பட்டி பெரியசாமி, பழனி, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சம்பத், சந்திரன், ஆதிலட்சுமி சம்பத், குமரேசன், இளவரசன், மண்டலப் போக்குவரத்து கழக தலைவர் சிவம் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags : celebration ,by-elections ,
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்