×

வாக்குப்பதிவு இறுதிமுடிவுகள் வெளியாவதில் காலதாமதம்

விழுப்புரம், அக். 25: வாக்கு எண்ணிக்கை குளறு படியால் வாக்குப்பதிவு இறுதிமுடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டது. விக்கிரவாண்டி தொகுதியில் பதிவான வாக்குகள் நேற்று விழுப்புரம் அய்யூர்அகரம் இஎஸ் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந்தது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அரை மணி நேரம் காலதாமதமாக தொடங்கப்பட்டது. இந்நிலையில் 14 ேமஜைகள் அமைக்கப்பட்டு 20 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் 5 சுற்றுகள் மந்தமாக வாக்கு எண்ணிக்கை நடந்தநிலையில் அதன்பிறகு விறு, விறுப்பாக வாக்கு எண்ணிக்கை சென்றது.பிற்பகல் 1 மணிக்குள் 20 சுற்றுகளாக அனைத்து வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்டன. இருப்பினும் வாக்கு எண்ணிக்கை இறுதிமுடிவு வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டது. ஒரு இயந்திரத்தில் மட்டும் பதிவான வாக்குகள் எண்ணுவதில் கோளாறு ஏற்பட்டதால் அதன் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளை வைத்து மீண்டும் எண்ணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாலை 4 மணிக்கு மேல்தான் வாக்கு எண்ணிக்கை இறுதி முடிவுகள் வெளியாகின. இதற்கு நாங்குநேரி வாக்கு எண்ணிக்கை மந்தமாக நடந்தபோதிலும் விக்கிரவாண்டி இறுதி அறிவிப்புக்கு முன்னதாக நாங்குநேரி அறிவிப்பு வெளியானது.

Tags : release ,
× RELATED தேர்தல் பத்திர எண்களை வெளியிட பாரத...