×

முன்விரோத தகராறில் கோஷ்டி மோதல்: 4பேர் படுகாயம்

சின்னசேலம், அக். 25: சின்னசேலம்  அருகே பெரியசெருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல்(55). இவருக்கும் அதே  ஊரைச்சேர்ந்த ராசேந்திரன் என்பவருக்கும் நிலபிரச்னை சம்பந்தமாக  முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் பிரச்னைக்குரிய இடத்தை கிராம  நிர்வாக அலுவலர் அளிக்க வருவதாக வந்த தகவலை ராசேந்திரன் தரப்பினரிடம்  சொல்ல வடிவேல் சென்றதாக தெரிகிறது. அப்போது இருதரப்பிற்கும் வாக்குவாதம்  முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர்  அசிங்கமாக திட்டி,  இரும்பு பைப்பால் தாக்கி, கொலைமிரட்டல்  விடுத்துக்கொண்டனர். இதில் வடிவேல் புகாரின்பேரில் ராசேந்திரன், அவரது  மனைவி சந்திரா உள்ளிட்ட 6 பேர் மீதும், ராசேந்திரன் தம்பி வெங்கடேசன்  புகாரின்பேரில் வடிவேல், ராசா உள்ளிட்ட 5 பேர் மீதும் சின்னசேலம்  சப்இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் வழக்கு பதிவு செய்து ராசேந்திரன், ராசா  ஆகியோரை கைது செய்தார்.

Tags : Clash ,
× RELATED நடப்புத் தொடரில் முதல் மோதல்: கொல்கத்தாவை சமாளிக்குமா பஞ்சாப்