×

இடைத்தேர்தலில் வெற்றி: அதிமுக கொண்டாட்டம்

நெல்லை, அக். 25:  நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி பெற்றதையடுத்து நெல்லையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். பாசறை மாவட்ட செயலாளர் சேர்மபாண்டி, களக்காடு ஒன்றிய செயலாளர் ஜெயராமன், புறநகர் மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் முத்துக்குட்டிபாண்டியன், காவல்துறை ஆறுமுகம், ஏர்வாடி பேரூர் செயலாளர் பாபு, திருக்குறுங்குடி பேரூர் செயலாளர் முருகன், அவைத்தலைவர் வீரபாண்டியன், அணி செயலாளர் முருகேசன், கடையம் ஒன்றிய செயலாளர் அருவேல்ராஜ், ஆழ்வார்குறிச்சி சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.

வண்ணார்பேட்டை சந்திப்பில் மாநகர மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். விஜிலாசத்யானந்த் எம்பி, அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ெபாருளாளர் சண்முகையா, அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர்கள் காபிரியேல் ஜெபராஜன், மகபூப்ஜான், ஜெ. பேரவை செயலாளர் ஜெரால்டு, பகுதி செயலாளர்கள் ஜெனி, மோகன், வக்கீல் ரவி ஆறுமுகம், நிர்வாகிகள் காந்தி வெங்கடாசலம், தங்கபிச்சையா, முன்னாள் மேயர் புவனேஸ்வரி, சிபா முருகன், அம்ஸ் முருகன், தமிழ்ச்செல்வி, விகேபி சங்கர், திருத்து சின்னத்துரை, பகவதிமுருகன், சீனிமுகமது சேட், கணபதிசுந்தரம், ஜி.பி.மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கொக்கிரகுளத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அரசு பொறியியல் கல்லூரி முன்பு கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அமைச்சர் ராஜலட்சுமி, அரசு வக்கீல்கள் சிவலிங்கமுத்து, பால்கனி, கல்லூர் வேலாயுதம், முன்னாள் மண்டல தலைவர் எம்சி.ராஜன், வக்கீல் ரமேஷ், சிந்தாமணி ராமசுப்பு, மாநில பேச்சாளர்கள் வாஸ்து தளவாய், காந்திமதிநாதன், கபாலி, ஞானமுத்து, செக்காரக்குடி காமராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : by-election ,celebration ,AIADMK ,
× RELATED மாமல்லபுரத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்