×

நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தென்காசி, அக். 25:  நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வன் வெற்றி பெற்றதையடுத்து நெல்லை மாவட்டம்  முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும்  கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி நகர அதிமுகவினர், பழைய பஸ் நிலையம் அருகே பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நகர செயலாளர் சுடலை தலைமை வகித்தார். மாவட்ட முன்னாள் செயலாளர் குமார்பாண்டியன் முன்னிலை வகித்தார்.
நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் வெள்ளப்பாண்டி, மாநில பொதுக்குழு கசமுத்து, மாவட்ட பிரதிநிதி மாரிமுத்து, வார்டு செயலாளர்கள் சாமி, சாகுல்ஹமீது, கிருஷ்ணமூர்த்தி, சரவணன், தங்கம், ராமதாஸ், வேலு, முத்துக்குமாரசாமி, அகமதுஷா, மாரியப்பன், பட்டுபூச்சி பீர்முகம்மது, மாணிக்கம், திருமலை, அப்துல்காதர், கார்த்திகேயன், குற்றாலம் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கீழப்பாவூரில் பேரூர் அதிமுக செயலாளர் ஜெயராமன் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் பேச்சாளர் தீப்பொறி அப்பாத்துரை, கப்பல், கோபால், வேல், ராமச்சந்திரன், தமிழ்செல்வன், முத்துசாமி, சிவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாவூர்சத்திரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் தலைமை வகித்தார். நகர செயலாளர் பால்அன்புராஜா, நிர்வாகிகள் தமிழ் என்கிற ராமசாமி, ஐவராஜா, கதிரவன், ராமசாமி, மணிவண்ணன், தர்மராஜ், அருள்ராஜ், திருமலைமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில் பஸ் நிலையம் முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு நெல்லை கூட்டுறவு பேரங்காடி துணை தலைவர்  வேலுச்சாமி தலைமை வகித்தார். மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் வேல்முருகன், நகர  பேரவை செயலாளர் சவுந்தர் என்ற சாகுல்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில் நகர  எம்ஜிஆர் மன்ற செயலாளர் சின்னராஜ், தேமுதிக மாவட்ட அவைத்தலைவர்  முத்துக்குமார், வர்த்தக அணி துணை செயலாளர் சங்கர், அதிமுக குருவிகுளம்  ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணசாமி, நிர்வாகிகள் ஆபரேட்டர் மணி, தண்டபாணி,  அப்பாஸ், காளைபாண்டியன், குட்டி மாரியப்பன், மாரிமுத்து, ராமர்பாண்டியன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  அம்பை பூக்கடை சந்திப்பில் நகர செயலாளர் அறிவழகன் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் மாவட்ட துனை செயலர் பார்வதிபாக்கியம், அவைத்தலைவர் பழனி, மகளிரணி பிச்சம்மாள், ராமையா, கூட்டுறவு தலைவர் மணிஐயப்பன், அக்பர்ஷா, மாவட்ட பிரதிநிதி சுடலை, சோம செல்லைய்யா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சுரண்டையில் பேரூர் செயலாளர் சக்திவேல் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில் அதிமுக  நிர்வாகிகள் முருகையா, ஜெயப்பிரகாசம், கோட்டூர்சாமி பாண்டியன், ஜவகர் தங்கம், ராஜேஷ், சங்கரன், அந்தோணி, இந்திரா அழகுதுரை, பழனி, பாலையா, தேனம்மாள் தங்கராஜ், தாமரை புஷ்பம், பாஜ நிர்வாகிகள் ஆறுமுகச்சாமி, ஐயப்பன், முருகேசன், தேமுதிக நகர செயலாளர் சேர்மன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வி.கே.புரத்தில் நகர செயலாளர் கண்ணன் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதில் பேச்சாளர் மீனாட்சிசுந்தரம், முன்னாள் கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணன், ஆபிரகாம் மற்றும் இசக்கிமுத்து, கிட்டு, குஞ்சுபாலு, டாணாசிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேரன்மகாதேவியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில் நகர செயலாளர் ஐசக்பாண்டியன், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் பழனிக்குமார், முன்னாள் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் கந்தசாமி, கூட்டுறவு வங்கி தலைவர் முருகன்நயினார் மற்றும் மாரிச்செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஏர்வாடி நடந்த வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு அதிமுக நகர செயலாளர் பாபு தலைமை வகித்தார். துணை செயலாளர் மாயாண்டி,  பொருளாளர் காமராஜ், பாசறை செயலாளர் சிவகுமார், ஜெ. பேரவை செயலாளர் சேக் ஒலி, எம்ஜிஆர் மன்ற செயலாளர் மீரான் பிள்ளை, வார்டு செயலாளர்கள் பீர் முகமது, கோவில்வாசல் செந்தில், முகமது சாலிக், சிவசந்திரன், இசக்கிவேல், ராஜா, மாரியப்பன், சுப்பிரமணியன், கந்தசாமி, இஸ்மாயில், அப்துல்காதர், ஆறுமுகம், தாமஸ், முகமது ரபீக், முத்துவேல், முகைதீன் பிச்சை, ஜார்ஜ், ராஜா ரிஸ்வான், சுப்பையா, செல்லத்துரை மற்றும் அதிமுகவினர் கலந்துகொண்டனர்.

குற்றாலம் அண்ணா சிலை முன்பு பேரூர் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி  கொண்டாடினர். மாவட்ட  முன்னாள் செயலாளர் குமார்பாண்டியன் தலைமை வகித்தார். பேரூராட்சி முன்னாள்   துணை தலைவர் கணேஷ்தாமோதரன், வீட்டுவசதி சங்க தலைவர் சுரேஷ், ஜெ. பேரவை  செயலாளர் சாலுக்குட்டிபாண்டியன், வினிஸ், முத்துக்குமார், ஜமால்,  மணிகண்டன், குமாரசாமி, ஜெயக்குமார், பிச்சை, பால்ராஜ், குமார், முருகன்,  வார்டு செயலாளர்கள் சுடலைமுத்து, பாஸ்கர், சின்னத்தம்பி, பெரியபிள்ளைவலசை  ரவி என்ற வேம்பு, கருப்பசாமி, அமுல்ராஜ், பாண்டியன், சுந்தர்ராஜ், ராஜா   உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : celebration ,Rediarpatti Narayanan ,Nankuneri ,
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்