×

கரூர் சுங்ககேட் சந்திப்பு சாலையோரம் தேங்கிய மழை

நீரால் பாதிப்புகரூர், அக். 25:  கரூர் திருச்சி மற்றும் திண்டுக்கல் சாலைகள் பிரியும் இடம் சுங்ககேட். இதில் திண்டுக்கல் சாலை பிரியும் இடத்தில் மெடிக்கல், விடுதி மற்றும் ஆட்டோ ஸ்டேண்ட் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக, சந்திப்பு சாலையோரம் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது. இதில், பல்வேறு காய்ச்சல்களை உண்டு பண்ணும் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு தொந்தரவுகளை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக இந்த பிரச்னை இப்பகுதியில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மழை பெய்யும் சமயங்களில் மழைநீர் தேங்காத வகையில் ஏற்பாடுகளை அதிகாரிகள் பார்வையிட்டு சரி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Karur Chungkate ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...