×

விபத்துகளைத் தடுக்க எஸ்ஐ எடுக்கும் முயற்சி பெரியகுளம் மக்கள் பாராட்டு

பெரியகுளம், அக்.24:  விபத்துகளைத் தடுப்பதற்காக பெரியகுளம் பகுதியில் எஸ்ஐ ஒருவர் செய்து வரும் செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். பெரியகுளத்தில் கள்ளிப்பட்டி, கைலாசபட்டி, தென்கரை, வடகரை உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனைக் கட்டப்படுத்தும் விதமாக பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வரும் அசோக் தனது சொந்த செலவில் பெரியகுளம் பகுதியில் விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளில் தானே முன்னின்று ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டி வருகிறார். இதனை பார்த்த பொதுமக்கள் அவரை நேரிலும், வாட்ஸ்அப் முலமாகவும் பாராட்டி வருகின்றனர்.

Tags : SI ,accidents ,population ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...