×

தேனியில் நிதித்துறை செயலர் பேட்டி தேனி மாவட்டத்தில் மாயமாகிப்போன பசுமைச்சாலைகள்

தேனி, அக். 24: தேனி மாவட்டத்தில் இருந்த பசுமைச்சாலைகள் அனைத்தும் மாயமாகியுள்ளன. தற்போது ஓரிரு இடங்களில் மட்டும் ஒரு சில கி.மீ தூரமே இந்த பசுமைச்சாலைகள் உள்ளன. மதுரையில் இருந்து வந்தாலும், திண்டுக்கல்லில் இருந்து வந்தாலும் தேனி மாவட்டத்திற்குள் நுழைந்த உடனே பசுமை தென்படத்தொடங்கி விடும். சில் என்ற காற்றும் வீசும். சாலையின் இருபுறமும் பசுமையாக அடர்ந்து வளர்ந்திருக்கும் புளிய மரங்கள் வரவேற்கும். தேனி நகருக்குள் நுழையும் போதே இந்த புளிமரநிழல்களால் சாலை இருட்டு கட்டி காணப்படும். இதேபோல் பெரியகுளம் முதல் கம்பம் வரையும், தேனி முதல் கம்பம் வரையும், தேனி முதல் போடி வரையும் இப்படித்தான் இருக்கும்.

சீலையம்பட்டியில் இருந்து சின்னமனூர் செல்லும் வரை அடர்ந்து வளர்ந்து காணப்பட்ட சாலையோர புளியமரங்களால் காட்டிற்குள் பயணிப்பது போன்ற ஒரு சுகமான பயணம் பயணிகளுக்கு கிடைத்தது. தவிர தேனி மாவட்டத்தில் கிராமச்சாலைகளிலும் இருபுறங்களிலும் மரங்கள் காணப்பட்டன.
 நான்கு வழிச்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலைத்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஒன்றிய சாலைகள், நகராட்சி சாலைகள் என பாகுபாடு இல்லாமல் சாலைகளை சீரமைக்கும் போது அனைவரும் சாலையோரம் இருந்த மரங்களை வெட்டி அகற்றினர். ஒரு மரத்தை வெட்டினால் 10 மரங்கள் நட வேண்டும் என்ற கோர்ட் உத்தரவையும் மதித்து இதுவரை ஒரு மரம் கூட நடப்படவில்லை. இதனால் தேனி மாவட்டத்தில் இருந்த பசுமைச்சாலைகள் அத்தனையும் அழிக்கப்பட்டு விட்டன.

தற்போது உத்தமபாளையம், பெரியகுளம், தாமரைக்குளம், கள்ளிப்பட்டி உட்பட சில இடங்களில் மட்டுமே சாலையோர புளியமரங்கள் எஞ்சியுள்ளன. இந்த மரங்களை பார்க்கும் மக்கள் மாவட்டம் முழுவதும் இது போல் இருந்ததே, மீண்டும் அந்த நிலை வராத என ஏக்கத்துடன் உள்ளன. மரங்களை வெட்டுவதில் அக்கறை காட்டிய சம்மந்தப்பட்ட துறைகள், மரங்களை வளர்ப்பதிலும் அக்கறை காட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியறுத்தி உள்ளனர்.

Tags : Secretary of Finance ,Theni ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...