×

மின்வாரியம் பொதுத்துறையாக நீடிக்க வலியுறுத்தி மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், அக். 24: மின்வாரியத்தை பொதுத்துறையாக நீடிக்க வலியுறுத்தி பெரம்பலூரில் மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூரில் மின் வாரியத்தை பொதுத்துறையாக நீடிக்க வலியுறுத்தி நான்குரோடு அருகே உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் நேற்று மாலை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் வட்ட தலைவர் சம்பத் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜகுமாரன், ராமர், ஜெயபால், செந்தாமரை, சடையன், பிச்சைப்பிள்ளை முன்னிலை வகித்தனர்.

அமைப்பின் வட்ட செயலாளர் கணேசன், வட்ட பொருளாளர் முத்துசாமி, மாநில துணைத்தலைவர் பஷீர் ஆகியோர் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினர். சிஐடியூ பெரம்பலூர் மாவட்ட தலைவர் அகஸ்டின், தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், ஓய்வூதியர் சங்க மாவட்ட நிர்வாகி கிருஷ்ணசாமி, மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மின்வாரியத்தை பொதுத்துறையாக நீடிக்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 3 சதவீத வைரவிழா சலுகை பெற்றிட வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்ட குறைபாடுகளை களைந்து மின்வாரியமே ஏற்று நடத்த வேண்டும். தினக்கூலி பணிக்காலத்தை இணைத்து ஓய்வூதியம் திருத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. வட்ட நிர்வாகி கண்ணையன் நன்றி கூறினார்.

Tags : Electricity Pensioners Welfare Organization ,
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா