×

மயிலாடுதுறை அருகே காரில் மூட்டை மூட்டையாக சாராயம் கடத்தியவர் கைது

மயிலாடுதுறை, அக்.24:மயிலாடுதுறை அருகே காரில் மூட்டை மூட்டையாக புதுச்சேரி சாராயம் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பெரம்பூர் கடை வீதியில் நேற்று முன்தினம் பெரம்பூர் போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.அந்த நேரத்தில் வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், காருக்குள் 10 மூட்டையில் புதுச்சேரி சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர். காரை ஓட்டி வந்த நீலவெளியை சேர்ந்த அன்பழகன் மகன் ரமேஷ்( 27) கைது செய்ததுடன் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. தீபாவளி நேரம் என்பதால் மது பாட்டில்கள் கடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

Tags : Mayiladuthurai ,
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...