×

தேசிய அளவிலான பிஸ்டு பால் போட்டி சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

முத்துப்பேட்டை, அக்.24: தமிழ்நாடு பிஸ்டு பால் அசோசியேஷன் மற்றும் சேலம் மாவட்ட பிஸ்டு பால் அசோசியேஷன் சார்பில் முதல் தேசிய அளவிலான பிஸ்டுபால் சாம்பியன்ஷிப் போட்டி ஏற்காடு சென்ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, லட்சத்தீவு, அந்தமான், நிக்கோபார், புதுச்சேரி உட்பட பல மாநிலங்களை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் திருவாரூர் மாவட்டம் சார்பில் முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு விளையாடி தேசிய அளவில் சிறப்பிடம் பெற்றனர். சிறப்பாக விளையாடிய மாணவிகளை பள்ளி முதல்வர் சகுந்தலா, துணை முதல்வர் ஆனந்தி, பள்ளி தலைமையாசிரியை திவ்யா அன்னபூரணி, திருவாரூர் மாவட்ட பிஸ்டு பால் அசோசியேஷன் செயலாளர் ஆசிரியர் செந்தில் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் மாணவிகளுக்கு பயிற்சிஅளித்து வழி நடத்திச் சென்ற பள்ளி உடற்கல்வி ஆசிரியைகள் ரஞ்சனி, நந்தினி ஆகியோரையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : National Pistachio Competition ,
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...