×

முத்துப்பேட்டையில் நிலவேம்பு கசாயம் வழங்கல்

முத்துப்பேட்டை, அக்.24: முத்துப்பேட்டை பகுதியில் தினந்தோறும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கு அரசு துறையினரும், பல்வேறு சமூக அமைப்புகளும் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன் டெங்கு காய்ச்சலை தடுக்க உதவும் நிலவேம்பு கசாயம் பரவலாக வழங்கி வருகின்றனர். இந்நிலையில் முத்துப்பேட்டையில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொழிலாளர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட ஆயிரக்கணக்கானவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் துவக்க விழா பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் கோவி.ரெங்கசாமி தலைமை வகித்தார். செயலாளர் விஜயகுமார் வரவேற்று பேசினார். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் தினமும் கட்டிட வேலைகள், விவசாய வேலைகள் கடைகள் மற்றும் பல்வேறு வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. அதேபோல் ஆசாத்நகர் உள்பட முத்துப்பேட்டையில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு நிலவேம்பு கசாயம் எடுத்து சென்று அதன் நிர்வாகிகள் வழங்கினர்.

Tags :
× RELATED வாக்களிக்க உற்சாகத்துடன் வந்த மாற்று திறனாளிகள், மூத்தோர்