×

வதியம் கண்டியூர் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பத்தால் வாகன ஓட்டிகள் அவதி அகற்ற மக்கள் கோரிக்கை




குளித்தலை அக் 24: வதியம்- கண்டியூர் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பத்தால் வாகனஓட்டிகள்அவதியடைந்து வருகின்றனர். இதனை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியம் ஊராட்சிக்கு உட்பட்ட வதியம் கண்டியூர் சாலை உள்ளது. இச்சாலை வழியாக செல்லும் பொழுது வளைவு ஒன்று உள்ளது. இந்த வளைவு அருகே மின் கம்பம் ஒன்று சிமென்ட் சாலையில் நடுப்பகுதியில் உள்ளது.
இதனால் அப்பகுதியில் வாகனங்கள் அவசர தேவைக்கு செல்லமுடியாமல் இருந்து வந்துள்ளது சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மின்கம்பத்தை அகற்ற அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கோரிக்கையை ஏற்று மின்வாரிய அதிகாரிகள் புதிய மின் கம்பத்தை அருகிலேயே நட்டுவைத்து பல நாட்களாகியும் இணைப்பு கொடுக்கப்படாமல் பழைய மின்கம்பத்தை அகற்றாமல் இருந்து வருகிறது.தற்போது மழைக்காலம் என்பதால் அவ்வழியாக செல்லும் சிறியவர்கள் முதியவர்கள் கால்நடைகள் எதிர்பாராவிதமாக மின்கம்பத்தை தொட நேரிட்டால் பாதிப்பில் ஏற்படும் சூழ்நிலை உருவாவதற்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மின் கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பத்திற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : motorists ,road ,Vadiyam Kandiyoor ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி